விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

நிகழ்ச்சித் தொகுப்பாளரானார் நடிகை லக்‌ஷ்மி பிரியா!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளராகியுள்ளார் சின்ன திரை நடிகை லக்‌ஷ்மி பிரியா.

News image

லக்‌ஷ்மி பிரியா - இன்ஸ்டாகிராம்

Updated On :28 ஏப்ரல் 2025, 4:13 pm IST

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் (10வது சீசன்) புதிய தொகுப்பாளராகியுள்ளார் சின்ன திரை நடிகை லக்‌ஷ்மி பிரியா.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மகாநதி தொடரில் நாயகியாக நடித்துவரும் இவர், பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு பதிலாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

சமீபத்தில் பிரியங்காவுக்குத் திருமணம் நடைபெற்ற நிலையில், நிகழ்ச்சியில் அவருக்கு பதிலாக புதிய தொகுப்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார்.

லக்‌ஷ்மி பிரியா

லக்‌ஷ்மி பிரியா - இன்ஸ்டாகிராம்

தன்னுடைய இயல்பான நகைச்சுவை திறனால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மக்களுக்கு மிகவும் நெருக்கமான நிகழ்ச்சியாக மாற்றியவர் பிரியங்கா.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் மாகாபா ஆனந்த் உடன் சேர்ந்து, பிரியங்கா அடிக்கும் லூட்டிகளும் குறும்புத்தனங்களும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கூறலாம்.

அதோடு மட்டுமின்றி மாகாபா ஆனந்த் - பிரியங்கா கூட்டணிக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு உள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதோடு மட்டுமின்றி, விருது நிகழ்ச்சிகளையும், திரைப்பட விழாக்களையும் வெற்றிகரமாகத் தொகுத்து வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்காவுக்கு பதிலாக நடிகை லக்‌ஷ்மி பிரியா களமிறக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் பிரியங்காவுக்குத் திருமணம் நடைபெற்றதால், அவருக்கு ஓய்வு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Story image

dinamani

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளராகியுள்ள லக்‌ஷ்மி பிரியா, பிரியங்காவைப் போன்று மிகவும் கலகலப்பாக தொகுத்து வழங்குவாரா? அவரின் இடத்தை நிரப்புவாரா? என சமூகவலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தன்னுடையே சினிமா இலக்கில் புதிய வாய்ப்பைப் பெற்றுள்ள லக்‌ஷ்மி பிரியா, அதற்குரிய உழைப்பை அளித்து மக்களை மகிழ்விப்பார் என்பதே ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.