கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நிகழ்ச்சித் தொகுப்பாளரானார் நடிகை லக்‌ஷ்மி பிரியா!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளராகியுள்ளார் சின்ன திரை நடிகை லக்‌ஷ்மி பிரியா.

News image

லக்‌ஷ்மி பிரியா

இன்ஸ்டாகிராம்

Updated On :28 ஏப்ரல் 2025, 10:43 am

DIN

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் (10வது சீசன்) புதிய தொகுப்பாளராகியுள்ளார் சின்ன திரை நடிகை லக்‌ஷ்மி பிரியா.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மகாநதி தொடரில் நாயகியாக நடித்துவரும் இவர், பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு பதிலாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

சமீபத்தில் பிரியங்காவுக்குத் திருமணம் நடைபெற்ற நிலையில், நிகழ்ச்சியில் அவருக்கு பதிலாக புதிய தொகுப்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார்.

லக்‌ஷ்மி பிரியா

லக்‌ஷ்மி பிரியா

தன்னுடைய இயல்பான நகைச்சுவை திறனால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மக்களுக்கு மிகவும் நெருக்கமான நிகழ்ச்சியாக மாற்றியவர் பிரியங்கா.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் மாகாபா ஆனந்த் உடன் சேர்ந்து, பிரியங்கா அடிக்கும் லூட்டிகளும் குறும்புத்தனங்களும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கூறலாம்.

அதோடு மட்டுமின்றி மாகாபா ஆனந்த் - பிரியங்கா கூட்டணிக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு உள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதோடு மட்டுமின்றி, விருது நிகழ்ச்சிகளையும், திரைப்பட விழாக்களையும் வெற்றிகரமாகத் தொகுத்து வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்காவுக்கு பதிலாக நடிகை லக்‌ஷ்மி பிரியா களமிறக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் பிரியங்காவுக்குத் திருமணம் நடைபெற்றதால், அவருக்கு ஓய்வு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Story image

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளராகியுள்ள லக்‌ஷ்மி பிரியா, பிரியங்காவைப் போன்று மிகவும் கலகலப்பாக தொகுத்து வழங்குவாரா? அவரின் இடத்தை நிரப்புவாரா? என சமூகவலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தன்னுடையே சினிமா இலக்கில் புதிய வாய்ப்பைப் பெற்றுள்ள லக்‌ஷ்மி பிரியா, அதற்குரிய உழைப்பை அளித்து மக்களை மகிழ்விப்பார் என்பதே ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.