விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒளரங்கசீப்பை அறைவேன்: விஜய் தேவரகொண்டா பேச்சால் சூர்யாவுக்கு சிக்கல்?

முகலாய மன்னரான ஒளரங்கசீப் மற்றும் ஆங்கிலேயரை அறைவேன் என நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News image

விஜய் தேவரகொண்டா - படம் | 2டி என்டர்டெயின்மென்ட்

Updated On :29 ஏப்ரல் 2025, 5:31 pm

முகலாய மன்னரான ஒளரங்கசீப் மற்றும் ஆங்கிலேயரை அறைவேன் என நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ பட விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குநர் வெங்கி அட்லுரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா சூர்யாவின் நடிப்பையும் அவரால் ஈர்க்கப்பட்டதையும் குறிப்பிட்டுப் பேசினார். அப்போது, நீங்கள் கடந்த காலத்திற்குச் செல்ல விரும்பினால் யாரைச் சந்திப்பீர்கள், என்ன செய்வீர்கள் என நெறியாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா,

``நான் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான சாவா திரைப்படத்தை பார்த்தேன். அதில் ஒளரங்கசீப்பின் செயல்பாடுகளை பார்த்தபோது அதிருப்தி இருந்தது. எனக்கு மட்டும் கடந்த காலத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் ஆங்கிலேயர் காலத்திற்குச் சென்று பிரிட்டிஷ்காரர்களுக்கு இரண்டு அறை கொடுக்க வேண்டும். அது மட்டுமல்ல ஒளரங்கசீப்புக்கும் இரண்டு அறை கொடுக்க வேண்டும். அந்த அளவுக்கு எனக்கு கோபம் இருக்கிறது.

எனக்கு கடந்த காலத்துக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் என்னிடம் இது போன்று அறை வாங்குவதற்கான ஆள்களின் பட்டியல் நிறைய இருக்கிறது’’ எனக் குறிப்பிட்டார்.

மேலும், பஹல்காம் தாக்குதல் சம்பவம் குறித்து பேசிய அவர், ``பயங்கரவாதிகளுக்கு மூளை இல்லை. அவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட வேண்டியது அவசியம். பாகிஸ்தானால், தன் நாட்டுக்குள் நடக்கும் சொந்த பிரச்னையைக்கூட கையாள முடியாது. ஆனால் காஷ்மீருக்காக இந்தியாவை தாக்க மட்டும் துணிச்சல் உள்ளது.

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, பாகிஸ்தானுடன் இந்தியா போருக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பாகிஸ்தானியர்களே தங்கள் அரசாங்கத்தால் சலிப்படைந்து கிளர்ச்சி செய்வார்கள்’’ என்று விஜய் தேவரகொண்டா பேசினார்.

விஜய் தேவரகொண்டாவின் பேச்சு சிலருக்கு அதிருப்தி அளித்ததால், சமூக வலைதளங்களில் சூர்யாவுக்கு எதிராகவும் சிலர் கருத்து தெரிவித்தது சர்ச்சையைக் கிளப்பியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.