
எதிர்நீச்சல் தொடருக்கான டிஆர்பி கடந்த மூன்று வாரங்களில் உச்சத்தை எட்டியுள்ளது.
எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கு கிடைக்கவில்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது படிப்படியாக அதிக டிஆர்பி பட்டியலில் எதிர்நீச்சல் -2 இணைந்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு எதிர்நீச்சல் -2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடர் இந்த வாரம் முதல் சனிக்கிழமை ஒளிபரப்பாகாது. அதற்கு பதிலாக திங்கள் - வெள்ளி வரை மட்டுமே ஒளிபரப்பாகவுள்ளது.
எனினும், டிஆர்பி புள்ளிப் பட்டியலில் எதிர்நீச்சல் -2 தொடர் தொடர்ந்து தனது புள்ளிகளை அதிகரித்து வருகிறது. 27வது வாரத்தில் 8.36 டிஆர்பி புள்ளிகளைப் பெற்றிருந்தது. 28வது வாரத்தில் 8.49 புள்ளிகளாக அதிகரித்த நிலையில், இந்த வாரத்தில் 8.90 புள்ளிகளாக டிஆர்பி அதிகரித்துள்ளது.
கடந்த 3 வாரங்களாக எதிர்நீச்சல் -2 தொடரின் டிஆர்பி புள்ளிகள் தொடர்ந்து அதிகரித்துள்ளதால், மீண்டும் பழைய நிலைக்கு எதிர்நீச்சல் வந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எதிர்நீச்சல் முதல் பாகமானது, மற்ற தொடர்களை பின்னுக்குத்தள்ளி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்தது. ஆனால், எதிர்நீச்சல் -2 தொடரானது, டாப் 5 இடங்களில் ஒன்றாக மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்நீச்சல் -2 தொடரில் பார்வதி, கனிஷ்கா, ஹரிபிரியா இசை, பிரியதர்ஷினி ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். முதல் பாகத்தில் இருந்த நடிகர்கள் பலரும் இந்த பாகத்திலும் தொடர்கின்றனர்.
தற்போது, ஆதி குணசேகரன் மகனின் காதல் - திருமணம் குறித்த காட்சிகள் இடம் பெற்றுவருவதால் பல்வேறு திருப்பங்கள் ஏற்படுகின்றன. இதனால், தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | நாதஸ்வரம் சீரியலின் கின்னஸ் சாதனை குறித்துப் பேசிய நடிகை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.