இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்! முடிவை கைவிடுகிறதா தமிழக அரசு?மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்புஇந்திய பொருள்கள் மீது 100% வரி: மசோதாவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்!யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம்!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு

இயக்குநரான தயாரிப்பாளர்... அதர்வா புதிய பட அறிவிப்பு!

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியுள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதயம் முரளி

Published On :

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தமிழில் தனது முதல் படமாக தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி, எஸ்டிஆர் 49 ஆகிய திரைப்படங்களையும் இந்த நிறுவனம் தயாரிக்கின்றது.

ஆகாஷ் பாஸ்கரன்

ஆகாஷ் பாஸ்கரன்

இந்த நிலையில், அதர்வா நடித்துள்ள ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் மூலம் டான் பிக்சர்ஸ் நிறுவன உரிமையாளாரான தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சொந்தத் தயாரிப்பில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

’இதயம் முரளி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அதர்வா, பிரீத்தி முகுந்தன், காயடு லோஹர், தமன், நட்டி, நிஹாரிகா, ஏஞ்சலின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படம் ஜூன், ஜூலை மாதங்களில் திரைக்கு வரவுள்ளதாக டைட்டில் டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மறைந்த நடிகர் முரளியின் மிகவும் பிரபலமான திரைப்படம் ‘இதயம்’. அந்தப் படத்தில் வரும் முரளி கதாபாத்திரம் அனைவராலும் கொண்டாடப்பட்டது. தற்போது ’இதயம் முரளி’ திரைப்படத்தில் முரளியின் மகனான அதர்வாவே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.