/

பிக் பாஸ் 8 வெற்றியாளர் பெயரைக் கூறிய அன்ஷிதா!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பது குறித்த கேள்விக்கு நடிகை அன்ஷிதா பதிலளித்துள்ளார்.

News image

அன்ஷிதா - படம் | எக்ஸ்

Updated On :5 ஜனவரி 2025, 5:00 pm IST

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பது குறித்த கேள்விக்கு நடிகை அன்ஷிதா பதிலளித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13 வாரங்களை நிறைவு செய்துள்ளது. இந்த வாரத்தில் சனிக்கிழமையான நேற்று ராணவ் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து இன்று ஒரு போட்டியாளர் வெளியேறவுள்ளார். (மற்றொரு போட்டியாளராக மஞ்சரி வெளியேறுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன)

குறைந்த வாக்குகளைப் பெற்றதாக கடந்த வாரமும் அன்ஷிதா, ஜெஃப்ரி வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் இணைந்து பேட்டி அளித்துள்ளனர்.

இதில், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார்? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சற்றும் தாமதிக்காமல் பதிலளித்த அன்ஷிதா, ’வெற்றியாளர் யார் என்பது உலகத்துக்கே தெரியுமே, முத்துக்குமரன்’ எனக் கூறுகிறார்.

வெற்றியாளர் முத்துக்குமரன் என நீங்கள் முடிவு செய்தால் பிறகு ஏன் நீங்கள் பிக் பாஸ் வீட்டில் விளையாட்டை தொடர்ந்துகொண்டு இருந்தீர்கள், அப்போதே வெளியே வரவேண்டியதுதானே? என நெறியாளர் கேள்வி எழுப்புகிறார்.

இதேபோன்று விஷால் உடனான உறவு குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் கோபமடைந்த அன்ஷிதா, எங்குச் சென்றாலும் விஷால், விஷால், விஷால்தானா? என தன் குரலை உயர்த்தி ரசிகர்களை நோக்கி ஆவேசமடைகிறார்.

இது தொடர்பான முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.