கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

`கேம் சேஞ்சர்' டிக்கெட் உயர்வைத் திரும்பப் பெற்றது தெலங்கானா அரசு!

எதிர்காலத்தில் அதிகாலை காட்சிகள் அனுமதிக்கப்படாது என்றும் தெலங்கானா அரசு கூறியது.

News image
கேம் சேஞ்சர் நடிகர் ராம் சரண்
Updated On :12 ஜனவரி 2025, 5:35 am

DIN

கேம் சேஞ்சர் படத்தின் டிக்கெட் உயர்வுக்கு அளித்த உத்தரவை தெலங்கானா அரசு திரும்பப் பெற்றது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண், எஸ்.ஜே. சூர்யா, நடிகை கியாரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். இயக்குநர் ஷங்கரின் முதல் நேரடி தெலுங்குப் படமாக இந்தப் படம் வெள்ளிக்கிழமை (ஜன. 10) வெளியானது.

கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, தெலங்கானாவில் ஜனவரி 10 ஆம் தேதி மட்டும் 6 காட்சிகள் திரையிட அனுமதிக்கப்பட்டது. முதல்நாளில் மல்டிஃபிளக்ஸ் திரையரங்குகளில் கூடுதலாக ரூ. 150 வசூலிக்கவும், ஒற்றை திரையரங்குகளில் கூடுதலாக ரூ. 100 வசூலிக்கவும் அனுமதிக்கப்பட்டது.

தொடர்ந்து, ஜனவரி 11 முதல் 19 வரையிலான 9 நாள்களில் (5 காட்சிகள்) மல்டிஃபிளக்ஸ் திரையரங்குகளில் கூடுதலாக ரூ. 100 கட்டணமும், ஒற்றைத் திரையரங்குகளில் ரூ. 50 கூடுதல் கட்டணமும் வசூலிக்க அனுமதிக்கப்பட்டது.

மேலும், போதைப்பொருள் தடுப்பு மற்றும் சைபர் குற்றங்களின் தாக்கம் குறித்த விளம்பரங்கள் திரையிடப்பட வேண்டும் என்று தெலங்கானா அரசு கூறியிருந்தது.

இதனையடுத்து, திரையரங்குகளில் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டிக்கெட் விலை உயர்வைக் கண்டித்து, தெலங்கானா அரசை காங்கிரஸார் விமர்சித்தனர். இந்த நிலையில், திரையரங்குகளுக்கு கூடுதல் கட்டணம் குறித்த அளிக்கப்பட்ட உத்தரவை தெலங்கானா அரசு ரத்து செய்தது.

மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பொது நலன், சுகாதாரம், பாதுகாப்பு முதலானவற்றை கருத்தில்கொண்டு, எதிர்காலத்தில் அதிகாலை காட்சிகள் அனுமதிக்கப்படாது என்றும் தெலங்கானா அரசு கூறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.