எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பிக் பாஸ் 8: பணப்பெட்டியை எடுத்தாரா முத்துக்குமரன்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணப்பெட்டியை முத்துக்குமரன் எடுத்தாரா?

News image
Updated On :14 ஜனவரி 2025, 7:25 pm IST

பணப்பெட்டியை முத்துக்குமரன் எடுத்தாரா? அல்லது நேரத்தை தவிரவிட்டாரா? என்பது குறித்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதி வாரத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நிலையில் இன்று 100-வது நாளைக் கடந்துள்ளது. நிகழ்ச்சி நிறைவடைவதற்கு இன்னும் 5 நாள்களே உள்ளன.

தற்போது பிக் பாஸ் வீட்டில் முத்துக்குமரன், வி.ஜே. விஷால், ஜாக்குலின், செளந்தர்யா, பவித்ரா ஜனனி, ரயான் ஆகிய 6 பேர் உள்ளனர்.

சென்ற வாரமே, பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வாரம் பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

அந்த பணப்பெட்டியில் வைக்கப்படும் தொகையானது தொடர்ந்து அதிகரிக்கப்படும், வழக்கமாக பெட்டியை எடுப்பவர் பணத்தை எடுத்துகொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார்.

ஆனால், பிக் பாஸ் வரலாற்றில் முதன்முறையாக இந்த சீசனில் பெட்டியை எடுப்பவர்கள் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் வீட்டுக்குள் வந்துவிட்டால் போட்டியை தொடரலாம் என்றும் நேரத்தைத் தவிரவிட்டால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

முதல் பணப்பெட்டி போட்டியில் 30 மீட்டர் தொலைவில் ரூ.50,000 பணம் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை 15 விநாடிகளில் எடுக்க வேண்டும் அறிவிக்கப்பட்டது.

பணப்பெட்டியை முத்துக்குமரன் எடுக்கச் செல்லும் காட்சி புரோமோவில் வெளியாகியுள்ளது. பணப்பெட்டியை முத்துக்குமரன் எடுத்தாரா? அல்லது நேரத்தை தவிரவிட்டாரா என்பது குறித்த தகவல் இன்றைய நாள் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.