நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

ரேகா சித்திரம் படத்தைப் பாராட்டிய கீர்த்தி!

ரேகா சித்திரத்தில் நடித்த ஆசிஃப் அலி, அனஸ்வரா உள்ளிட்டோரைப் பாராட்டி கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டா பதிவு

News image

ரேகா சித்திரம் போஸ்டர் - Instagram | Asif Ali

Updated On :18 ஜனவரி 2025, 2:36 pm IST

ரேகா சித்திரம் படத்துக்கு பாராட்டு தெரிவித்து, நடிகை கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள்ளார்.

நடிகர் ஆசிஃப் அலியின் ரேகா சித்திரம் படம் நன்றாக இருப்பதாகக் கூறி, படக்குழுவினரைப் பாராட்டி, நடிகை கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டா பதிவில், ``ரேகா சித்திரம் படத்தின் திரைக்கதை, எழுதப்பட்ட விதம், ஒவ்வொரு குறிப்பும் திகைப்படைய வைத்தது. அன்ஸ்வரா சிறப்பாக நடித்தது நேசிப்பதாக இருந்தது. ஆசிஃப் அலியின் கதைத் தேர்வு குறிப்பிடக் கூடியதாய் இருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.

Story image

இயக்குநர் ஜோபின் டி சாக்கோ இயக்கத்தில் நடிகர் ஆசிஃப் அலி நடிப்பில் ரேகா சித்திரம் திரைப்படம், ஜனவரி 9-ல் வெளியானது. கிஷ்கிந்தா காண்டம் படத்துக்கு அடுத்ததாக ஆசிஃப் அலி நடித்த த்ரில்லர் படமாக இது அமைந்தது.

ஒரு பெண்ணின் மரணம் குறித்த மர்மத்தை பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் அதிகாரி ஒருவர் கண்டுபிடிப்பதை மையமாகக் கொண்டு, இந்தப் படத்தின் கதைக்களம் நகர்கிறது.

இந்தப் படத்தில் அனஸ்வரா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதுடன், இந்திரன்ஸ், நிஷாந்த் சாகர், ஜரின் ஷிஹாப், சித்திக் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.