ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

பராசக்தி! இரண்டு படங்களையும் பதிவு செய்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம்!

பராசக்தி பட பெயர் சர்ச்சை குறித்து...

News image
Updated On :30 ஜனவரி 2025, 10:20 am IST

நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி படங்களுக்கு ஒரே பெயர் வைத்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு பராசக்தி எனப் பெயரிட்டுள்ள டீசரை நேற்று (ஜன.29) வெளியிட்டனர்.

அதேபோல், நடிகர் விஜய் ஆண்டனி இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் நடிக்கும் அவரது 25-வது படத்திற்கு தமிழில் சக்தித் திருமகன் என்றும் தெலுங்கில் பராசக்தி என்றும் பெயரிட்ட போஸ்டரை பகிர்ந்தனர்.

இதனால் சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி படங்களுக்கு ஒரே பெயர் வைத்திருப்பது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியதும் இரண்டு படங்களின் தயாரிப்பு நிறுவனங்களும் அறிக்கை வெளியிட்டுள்ளன. இருவரும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முறையாக பெயரை பதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக, சிவகார்த்திகேயனின் பராசக்தி தெலுங்கிலும் அதே பெயரிலே வெளியாகிறது. தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இரண்டு படங்களையும் ‘பராசக்தி’ என்றே பதிவு செய்திருக்கின்றனர். எப்படி தயாரிப்பாளர்கள் சங்கம் இதைக் கவனத்தில் கொள்ளாமல் ஒரே பெயரை வழங்கியது என சர்ச்சை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.