மகாநதி தொடரில் இணைந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மகாநதி தொடரில் இன்ஸ்டாகிராம் பிரபலம் இணைந்துள்ளார்.

Swetha kumar

ஸ்வேதா குமார் - படம் - இன்ஸ்டாகிராம்

Published On :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மகாநதி தொடரில் இன்ஸ்டாகிராம் பிரபலம் இணைந்துள்ளார்.

நடிப்பின் மீது அதீத ஆர்வம் கொண்டு விடியோக்களை பதிவிட்டு வந்த ஸ்வேதா குமார், இந்த வாய்ப்பின் மூலம் முழுநேர நடிகையாக மாறியுள்ளார்.

சமூக வலைதளத்தில் பிரலமான இவர், மகாநதி தொடரில் நடிப்பதால், பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், கதையில் புதிய திருப்பங்களுக்கு வழிவகுக்கும் என்றும் ரசிகர்கள் கருதுகின்றனர்.

மிகுந்த உணர்வுப்பூர்வமான, யமுனா என்ற பாத்திரத்தில் நடிப்பதால், தனது நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பு ஸ்வேதாவிற்கு இத்தொடரில் அமைந்துள்ளது.

ஸ்வேதா குமார்

ஸ்வேதா குமார் - இன்ஸ்டாகிராம்

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரைஇரவு 7.30 மணிக்கு மகாநதி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

பிரவீன் பென்னட் இயக்கி வரும் இத்தொடரில் லட்சுமி பிரியா, சுவாமிநாதன், ருத்ரன் பிரவீன், ஸ்வேதா , கம்ருதீன், பேபி காவியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். டிஆர்பியிலும் இத்தொடர் முன்னணியில் உள்ளது.

இத்தொடரில் இருந்து நடிகை ஆதிரை விலகியுள்ளதால், யமுனா என்ற பாத்திரத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஸ்வேதா குமார் இதயம் தொடரில் இணைந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு விடியோக்களை பதிவிட்டு வந்த நிலையில், தற்போது நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால் அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Summary

The Instagram celebrity swetha kumar has joined idhayam serial, which is airing on Zee Tamil TV.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.