மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களில் மலர் மாலைகள் சாற்றும் பணி!விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்! சீனு ராமசாமிஇடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை! யாருக்கு ஆதரவு? அன்புமணி பேட்டிராஜிநாமா செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து! உயர் நீதிமன்றம் அதிருப்தி!ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!

கெளரி சீரியலில் புனிதாவுக்கு மாற்றாக புதிய நடிகை!

கெளரி தொடரில் இருந்து நடிகை புனிதா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நடிகை விமல் ஐஸு நடிக்கவுள்ளார்.

 vimalaishu

புனிதா / விமல் ஐஸு - இன்ஸ்டாகிராம்

Published On :

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கெளரி தொடரில் இருந்து நடிகை புனிதா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நடிகை விமல் ஐஸு நடிக்கவுள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கயல் தொடரின் மூலம் சின்ன திரையில் அறிமுகமான விமல் ஐஸு, குறுகிய காலத்திலேயே ரசிகர் பட்டாளத்தை ஈர்த்தவர். கயல் தொடரில் இவரின் நடிப்புக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது கலைஞர் தொலைக்காட்சியின் கெளரி தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவரின் வருகையால் கெளரி தொடரில் மேலும் பல திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், பக்தி மற்றும் மாயாஜாலக் கதை என்பதால், இவரின் நடிப்புக்கு ஏற்ற தருணங்கள் இத்தொடரில் அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கலைஞர் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள தொடர்களில் கெளரி தொடரும் ஒன்றாக உள்ளது. பத்மாவதி திரைக்கதை எழுத பரமேஷ்வர் இத்தொடரை இயக்குகிறார்.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இத்தொடர், இல்லத்தரசிகள் பலரை ரசிகர்களாகக் கொண்டுள்ளது. கெளரியாக சம்யுக்தாவும் துர்காவாக நந்தினியும் நடிக்கின்றனர். நரேஷ் ஈஸ்வர் நாயகனாக நடிக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் புகழ் பெற்ற நடிகை சுஜிதா, கருமாரி அம்மனாக சிறப்புத் தோற்றத்தில் இத்தொடரில் நடிக்கிறார்.

Summary

Actress Punetha has left the Gauri serial and will be replaced by actress Vimal Aishu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.