உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

மறுவெளியீட்டிலும் வரவேற்பைப் பெற்ற பாட்ஷா!

ரஜினியின் பாட்ஷா திரைப்படம் மறுவெளியீடானது குறித்து...

Published On :20 ஜூலை 2025, 5:22 pm IST

மறுவெளியீடான பாட்ஷா திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாட்ஷா திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது.

இன்றும் படத்தில் இடம்பெற்ற தேவாவின் பின்னணி இசை மற்றும் அனைத்து பாடல்களும் ரசிக்கப்படுகின்றன. இந்தப் படத்தில் ரகுவரன், நக்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வசூல் வெற்றியை அடைந்ததுடன் ரஜினியின் சிறந்த படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பாட்ஷா திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மறுவெளியீடானது.

முதல்முறை வெளியீடான போது இப்படத்தைக் கொண்டாடிய பல ரசிகர்கள் குடும்பத்துடன் பேரன், பேத்திகளுடன் வந்து திரைப்படத்தை மீண்டும் பார்த்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகின்றனர்.

இன்றைய தலைமுறை ரசிகர்களையும் கவர்ந்ததால் பல திரையரங்குகளில் இப்படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதால் மறுவெளியீட்டிலும் நல்ல வசூலைப் பெறும் என்றே தெரிகிறது.

actor rajinikanth baashha movie rerelease victory

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.