12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

எதிர்நீச்சலுக்கு போட்டியாக ஜீ தமிழில் சின்னஞ்சிறு கிளியே! ஒளிபரப்பு நேரம் அறிவிப்பு!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள சின்னஞ்சிறு கிளியே தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சின்னஞ்சிறு கிளியே தொடரில்... - படம் - இன்ஸ்டாகிராம்

Published On :

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள சின்னஞ்சிறு கிளியே தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆணாதிக்கத்திற்கு எதிராக பெண்கள் முன்னேற்றத்தை மையப்படுத்தி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரைப் போலவே, இந்தத் தொடரும் எடுக்கப்படுகிறது.

முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில், பைக் டாக்ஸி ஓட்டுதல், உணவு விநியோகம், டியூஷன் எடுப்பது எனப் பல வேலைகளைச் செய்து தனது குடும்பத்தை நிர்வகித்து வரும் பெண், ஆணாதிக்கம் நிறைந்த வீட்டிற்கு திருமணமாகிச் சென்று, அங்கு அவர் சந்திக்கும் சவால்களே இத்தொடரின் கதைக்களமாக உள்ளது.

சின்னஞ்சிறு கிளியே தொடரின் போஸ்டர்

சின்னஞ்சிறு கிளியே தொடரின் போஸ்டர் - இன்ஸ்டாகிராம்

இதனால், எதிர்நீச்சல் தொடர் போல இருந்தாலும், வெற்றி பெற்று சுயம்புவாக நிற்கத் துடிக்கும் மாறுபட்ட பெண்ணின் கதையாக சின்னஞ்சிறு கிளியே தொடர் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இத்தொடரில் ஸ்வாதிகா நாயகியாகவும், நரேஷ் நாயகனாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் ரெளத்திரம் சையத், மதுமிதா, அபிதா, ஆறுமுக வேலு, காயத்ரி உள்ளிட்டப் பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தத் தொடர் இன்று (ஜூலை 21) முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

Summary

Swathikas Chinnanjiru Kiliye serial telecast time in zee tamil

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.