பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

1,000-க்கும் அதிகமான திரைகளில் தலைவன் தலைவி!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான தலைவன் தலைவி திரைப்பட வெளியீடு குறித்து...

Thalaivan Thalaivi poster

தலைவன் தலைவி போஸ்டர். - படம்: சதய்ஜோதி ஃபிலிம்ஸ்.

Published On :

விஜய் சேதுபதி நடிப்பில் தலைவன் தலைவி திரைப்படம் இன்று (ஜூலை 25) உலகம் முழுவதும் 1,000-க்கும் அதிகமான திரைகளில் வெளியானது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மெனன் நடிப்பில் தலைவன் தலைவி திரைப்படம் உருவாகியுள்ளது.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்து, இன்று வெளியானது.

யோகி பாபு இந்தப் படத்தில் நடித்துள்ளதால் நகைச்சுவை காட்சிகள் அதிகம் இருக்குமென எதிர்பார்க்கபடுகிறது.

இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கெஞ்சுரனே பாடல் மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

கணவன் - மனைவி உறவுவின் சிக்கல்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள தலைவன் தலைவி இன்று 1,000-க்கும் அதிகமான திரைகளில் வெளியாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மகாராஜா திரைப்படத்துக்குப் பின் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

தலைவன் தலைவி போஸ்டர்.

தலைவன் தலைவி போஸ்டர். - படம்: சதய்ஜோதி ஃபிலிம்ஸ்.

டிரைலர் காட்சிகளில் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடிப்பு படத்தின் மீதான ஆவலை மேலும் அதிகரித்துள்ளது.

Vijay Sethupathi's Thalaivan Thalaivi released today (July 25) in over 1,000 screens worldwide.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.