இயக்குநர் அட்லி - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
புஷ்பா - 2 படத்தின் இமாலய வெற்றிக்குப் பின் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லி திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படம் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகிறது.
படத்தின் கதை முழுக் கற்பனை (fantacy) புனைகதையாக இருக்கும் எனத் தெரிகிறது. இப்படத்தில் நடிகை தீபிகா படுகோன் இணைந்ததை இன்று விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நாளை (ஜூன் 12) துவங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டுள்ளதாம்.
படம் முழுக்க முழுக்க ஃபேண்டசி பாணியில் உருவாகவுள்ளதால் படப்பிடிப்பிலும் பல விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: பிரேமலு - 2 கைவிடப்படுகிறதா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.