நடிகர் அமீர் கான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் படப்பிடிப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்த்தை நாயகனாக வைத்து கூலி படத்தை உருவாக்கி வருகிறார். இதில், சிறப்பு கதாபாத்திரத்தில் நடிகர் அமீர் கான் நடித்துள்ளார்.
இப்படத்தைத் தொடர்ந்து, இந்தாண்டு டிசம்பர் மாதம் கைதி - 2 திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார்.
அண்மையில் நேர்காணலில் பேசிய நடிகர் அமீர் கான், “நானும் லோகேஷ் கனகராஜும் ஒரு படத்தில் பணியாற்றவுள்ளோம். இது மிகப்பெரிய பட்ஜெட்டில் ஆக்ஷன் சூப்பர் ஹீரோ பாணி படமாக இருக்கும். அடுத்தாண்டு இறுதியில் இதற்கான பணிகள் துவங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
அமீர் கான் குறிப்பிட்ட சூப்பர் ஹீரோ கதை நடிகர் சூர்யாவுக்கு லோகேஷ் கனகராஜ் சொன்ன, ‘இரும்பு கை மாயாவி’யாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இப்படம் எப்போது துவங்கும் என்கிற கேள்விக்கு, ‘2026 செப்டம்பர் மாதம் படத்தின் பணிகள் துவங்கும்’ என அமீர் கான் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: அமீர் கானின் சித்தாரே ஜமீன் பர் தமிழ் டிரைலர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.