பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ராப் பாடகர் வேடனின் பாடல் பல்கலை. பாடத்தில் இணைப்பு!

கோழிக்கோடு பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் ராப் பாடகரான வேடனின் பாடல் இணைக்கப்பட்டுள்ளது.

பிரபல ராப் பாடகர் வேடன் - Instagram

Published On :

கேரளத்தின் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் பாடத்தில், பிரபல ராப் பாடகரான வேடனின் பாடல் இணைக்கப்பட்டுள்ளது.

மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமானவர் ராப் பாடகர் வேடன். வேற்றுமைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிரான இவரது பாடல்களின் மூலம் தனி ரசிகர் பட்டாளமே அவருக்கு உருவாகியுள்ளது.

இந்நிலையில், வேடனின் பாடலான ‘பூமி ஞ்யான் வாழுன்ன இடம்’ எனும் பாடல், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் மலையாள பட்டப்படிப்பின் மூன்றாம் செமஸ்டர் மாணவர்களுக்கான பாடத்தில், ஒப்பீட்டு இலக்கியத் தொகுதியாக இணைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடலை, பிரபல பாப் பாடகர் மைக்கல் ஜாக்சனின் ‘தே டோண்ட் கேர் அபௌட் அஸ்’ எனும் பாடலுடன் ஒப்பிட்டு, இரண்டு பாடல்களின் வரிகள், பாடிய விதம், ஆடல்கள் ஆகியவற்றைக் குறித்து மாணவர்கள் படிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்கல் ஜாக்சனின் பாடலுடன் வேடனின் பாடலை இணைக்க கடந்த மே 31 ஆம் தேதி நடைபெற்ற பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், வரும் கல்வியாண்டு முதல் இந்தப் புதிய பாடமானது மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.