25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

ஸ்டோலன் படக்குழுவைப் பாராட்டிய கமல் ஹாசன்!

ஸ்டோலன் குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டிய கமல்...

kamal haasan with stolen crew

ஸ்டோலன் படக்குழுவினருடன் கமல் ஹாசன்

Published On :16 ஜூன் 2025, 3:25 pm IST

ஹிந்தியில் உருவாகி கவனம் பெற்ற ஸ்டோலன் படத்தை நடிகர் கமல் ஹாசன் பாராட்டியுள்ளார்.

தயாரிப்பாளர் கௌரவ் திங்கரா தயாரிப்பில் இயக்குநர் கரண் தேஜ்பால் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஸ்டோலன் (stolen).

கதை நாயகனாக நடிகர் அபிஷேக் பானர்ஜி வடமாநில ரயில் நிலையம் ஒன்றில் தன் சகோதரருடன் இருக்கும்போது அங்கு குழந்தை ஒன்று காணாமல் போகிறது. இவர்கள்தான் சாட்சி என்பதால் குழந்தையைத் தேடி நாயகனும் குழந்தையின் தாயும் மேற்கொள்ளும் தேடுதலாக இப்படம் உருவாகியிருந்தது.

1.30 மணி நேரம் கொண்ட இப்படம் 2023 ஆம் ஆண்டே தயாரானது. ஆனால், திரையரங்குகளில் வெளியிடாமல் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றது.

படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் அமேசான் பிரைம் நிறுவனம் இதன் ஓடிடி உரிமையைப் பெற்று கடந்த ஜூன் 4 ஆம் தேதி வெளியிட்டனர்.

Story image

ஓடிடிக்கு வந்தபின் நிறைய பாராட்டுகளைப் பெற்று வருகிறது. வெறும் குழந்தைக் கடத்தல் படமாக இல்லாமல் பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் சுரண்டல்களையும் படம் பேசியதால் விமர்சகர்களிடம் நேர்மறையான கருத்துகளைப் பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தைப் பார்த்த நடிகர் கமல் ஹாசன் ஸ்டோலன் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.