லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

நிறுத்துங்கப்பா! புகைப்படக்காரர்களால் ஆத்திரமான சமந்தா!

புகைப்படக்காரர்களால் நடிகை சமந்தா கோபமடைந்தார்...

actor samantha angry with photographers

சமந்தா

Published On :18 ஜூன் 2025, 12:41 pm IST

தன்னைச் சூழ்ந்த புகைப்படக்காரர்களிடம் நடிகை சமந்தா கோபமாக நடந்துகொண்ட நிகழ்வு வைரலாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. நாக சைதன்யாவுடனான விவாகரத்து, மயோசிடிஸ் நோய் பாதிப்பு என கடந்த சில ஆண்டுகளாகவே சமந்தா நடிப்பில் பெரிதாக எந்தப் படமும் வெளியாகவில்லை.

ஆனாலும் தென்னிந்திய ரசிகர்களிடம் மிகுந்த செல்வாக்குள்ள நடிகையாகவே நீடிக்கிறார். முக்கியமாக, தமிழ் ரசிகர்கள் சமந்தாவை மீண்டும் தமிழ்ப் படங்களில் பார்க்க ஆர்வமாக இருக்கின்றனர். அண்மையில் வெளியான சுபம் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார்.

இந்த நிலையில், மும்பையில் உடற்பயிற்சி கூடத்திலிருந்து வெளியே வந்த சமந்தாவைச் சூழ்ந்த புகைப்படக்காரர்கள் தொடர்ச்சியாக புகைப்படம் மற்றும் விடியோக்களை எடுத்தனர்.

இதனால், ஆத்திரமான சமந்தா அவர்களைப் பார்த்து, ‘தயவுசெய்து நிறுத்துங்கப்பா’ என்றார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே மும்பையில் யூடியூப் மற்றும் பத்திரிகைத் துறையைச் சார்ந்த புகைப்படக்காரர்கள் பொதுவெளியில் தொந்தரவு செய்யும் விதமாக நடிகைகளைப் புகைப்படம் எடுத்து வருவது சர்ச்சையாகவே நீடிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.