மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

எதிர்நீச்சல் தொடரை முந்திய அய்யனார் துணை: இந்த வார டிஆர்பி!

தொடர்களின் இந்த வார டிஆர்பி விவரம் தொடர்பாக...

எதிர் நீச்சல் தொடர், அய்யனார் துணை தொடர்.

Published On :

இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் மருமகள் மற்றும் மூன்று முடிச்சு தொடர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன. எதிர்நீச்சல் தொடரை அய்யனார் துணை சீரியல் முந்தியுள்ளது.

சின்ன திரையில் ஒளிபரப்பாகும் எந்தெந்த தொடர்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது என்பதை டிஆர்பியின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

அந்தவகையில், தொடர்களின் டிஆர்பி விவரம் வெளியாகியுள்ளது.

மருமகள் மற்றும் மூன்று முடிச்சு தொடர்கள் 9.80 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளன.

சிங்கப் பெண்ணே தொடர் 9.63 டிஆர்பி புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் கயல் தொடர் 9.27 டிஆர்பி புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை தொடர்கள் முறையே 7.87, 7.62 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று நான்காம், ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளன.

எதிர்நீச்சல் தொடர் 7.50 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஆறாம் இடத்தைப் பிடித்துள்ளது. அன்னம் தொடர் 7.49 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2 தொடர் 6.87 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று எட்டாவது இடத்தையும் சின்ன மருமகள் தொடர் 6.72 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளன.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடர் 6.04 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று பத்தாம் இடத்தில் உள்ளது.

Summary

The series marumagal and mundru mudichu topped the TRP ratings this week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.