கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

‘மம்மூட்டி நலமாக உள்ளார். ஆனால்..’: மோகன்லால்

மம்மூட்டி குறித்து மோகன்லால்....

Published On :

நடிகர் மம்மூட்டியின் உடல்நலம் குறித்து மோகன்லால் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது. இதற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும், ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகும் முதல் மலையாளப் படமென்பதால் ரசிகர்களுக்கு ஆவல் அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, அண்மையில் நடிகர் மோகன்லால் இருமுடி கட்டி சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்ததுடன் நடிகர் மம்மூட்டியின் பெயருக்கு அர்ச்சனையும் செய்தார்.

எம்புரான் படத்தின் வெற்றிக்காக மோகன்லால் சபரிமலை சென்றிருக்கலாம் என்றாலும் அங்கு மம்மூட்டிக்கு அர்ச்சனை செய்தது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.

காரணம், இதற்கு சில நாள்களுக்கு முன் மம்மூட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருந்தது. அதனால்தான், மோகன்லால் நடிகர் மம்மூட்டி பெயரில் அர்ச்சனை செய்தார் எனக் கருதப்பட்டது.

ஆனால், நேற்று (மார்ச் 24) சென்னையில் நடைபெற்ற எம்புரான் நிகழ்வில் பேசிய மோகன்லால், “மம்மூட்டி என் நண்பர், சகோதரர். யாரோ ஒருவர் அர்ச்சனை சீட்டை இணையத்தில் பரப்பிவிட்டார். அவருக்காக நான் பிரார்த்தனை செய்ததை பொதுவெளியில் பேச விரும்பவில்லை. அவர் நலமுடன் இருக்கிறார். ஆனால், நமக்கெல்லாம் ஏற்படும் உடல் பிரச்னைகள்போல அவருக்கும் சின்ன பிரச்னைகள் உள்ளன. அவ்வளவுதான்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.