பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

கண்மணி மனோகரன் வீட்டில் நடந்த நிகழ்ச்சி! வைரல் விடியோ!

கண்மணி மனோகரன் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி தொடர்பாக...

News image

கண்மணி மனோகரன் - அஷ்வத்

Updated On :26 மார்ச் 2025, 7:43 pm IST

சின்ன திரை நடிகை கண்மணி மனோகரன் வீட்டில் நடந்த நிகழ்ச்சியின் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சின்ன திரை பிரபலங்களான கண்மணி மனோகரன் - அஷ்வத் தம்பதியினர் சில நாள்களுக்கு முன்பு தாங்கள் கருவுற்றிருப்பதை அறிவித்தனர்.

இந்நிலையில் சின்ன திரை பிரபலங்களும் ரசிகர்களும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதைக் கொண்டாடும் விதமாகவும் இவர்களின் திருமணம் நடைபெற்று 6 மாதங்கள் ஆனதைக் கொண்டாடுவதற்கும் சிங்கப்பூர் சென்றனர். சிங்கப்பூர் சென்று இவர்கள் பதிவிட்ட விடியோ இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், கண்மணி மனோகரன் கருவுற்று இருப்பதால், அவருடைய வீட்டில் எளிமையான முறையில் பூச்சூட்டு விழா நடைபெற்றுள்ளது. இது தொடர்பான விடியோவை கண்மணி மனோகரன் வெளியிட்டுள்ளார்.

"எங்கள் இதயங்களின் இருந்த ரகசியம், தற்போது உலகம் பார்க்கும்படி மலர்ந்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்த நடிகை கண்மணி மனோகரன், தொடர்ந்து அமுதாவும் அன்னலட்சுமியும், மகாநதி உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.

இதனிடையே ஜிஷ்ணு மேனன், தேஜஷ்வினி நடிக்கும் புதிய தொடரில் இணைந்த கண்மணி மனோகரன், திடீரென விலகுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.