காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

படப்பிடிப்பில் காயம், அடுத்த காட்சிக்கு உடனே தயாரான நானி! இயக்குநர் நெகிழ்ச்சி!

ஹிட் 3 படப்பிடிப்பு குறித்து அதன் இயக்குநர் கூறியதாவது...

நானிக்கு ஏற்பட்ட காயம், தையல் போடப்பட்ட புகைப்படங்கள். - படங்கள்: எக்ஸ் / சைலேஷ் கொலனு.

Published On :

ஹிட் 3 படப்பிடிப்பில் நானிக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது இருப்பினும் உடனடியாக அடுத்த காட்சிக்கு தயாரானது குறித்து இயக்குநர் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நானி நடிப்பில் மே.1ஆம் தேதி உலகம் முழுவதும் ஹிட் 3 திரைப்படம் வெளியானது.

இந்தப் படத்தினை சைலேஷ் கொலனு இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.

வால் போஸ்டர் சினிமா, அனானிமஸ் புரடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் இதுவரை ரூ.101 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்னதாக இயக்குநர் சைலேஷ் கொலனு தனது எக்ஸ் பதிவில் கூறியது வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில் நானியின் சண்டைக் காட்சி விடியோக்களையும் அதில் அவருக்கு நெற்றியில் ஏற்பட்ட காயம், தையல் போடப்பட்ட புகைப்படங்களையும் பதிவிட்டு அவர் கூறியதாவது:

நான் இதைத்தான் சொல்கிறேன். உடனடியாக அடுத்த காட்சிக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாகவே வந்துவிட்டார். இந்த உலகத்தில் நானிக்கு அனைத்து மரியாதைகளும் கிடைக்க வேண்டும்.

சினிமா மீதான நானியின் மரியாதை மிகவும் தொற்றக்கூடியது. உங்களுடன் பயணிக்க வாய்ப்பளித்ததுக்கு மிக்க நன்றி. ஹிட் 3 படம் எனது சினிமா வாழ்க்கையில் மிகவும் மகிழக்கூடிய பயணம். உங்களை நேசிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.