பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ - பாடல் வெளியீடு!

சட்டென்று மாறுது வானிலை படத்தின் 'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ' என்ற பாடல் இன்று வெளியானது.

நடிகர் ஜெய்

Published On :

நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள சட்டென்று மாறுது வானிலை படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய் தயாரித்து இயக்கும் புதிய படம் சட்டென்று மாறுது வானிலை.

ஜெய் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் , நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார். யோகிபாபு, கருடா ராம், ஸ்ரீமன் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

காதல் கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் முதல் இரு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் மூன்றாவதாக ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்ற பாடல் நடிகர் ஜெய் பிறந்தநாளான இன்று வெளியாகியுள்ளது.

இந்தப் பாடலை பாரதியாரின் வரிகளுடன் இணைத்து மதுரை சோல்ஜர் என்பவர் எழுதியுள்ளார். கிரிஷ் ஜி, மதுரை சோல்ஜர் ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்தப் படம் திரையரங்குகளில் விரைவில் வெளியாகவுள்ளது.

Summary

Naan vizhvenenru ninaithaayo song in the movie 'sattendru maarudhu vaanilai' released today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.