கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

விவாகரத்து முடிவில் சர்வானந்த்?

நடிகர் சர்வானந்த் திருமணப் புகைப்படங்களை நீக்கியுள்ளார்...

sharwanand with his wife

தன் மனைவியுடன் சர்வானந்த் - x

Published On :

நடிகர் சர்வானந்த் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கியுள்ளார்.

தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் கதாநாயகனாக கவனிக்கப்பட்டவர் நடிகர் சர்வானந்த். அப்படத்தின் வெற்றியால் தமிழ் சினிமாவிலும் வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தெலுங்கு நடிகர் என்பதால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வெற்றிகரமான நாயகன் ஆனார். இடையே, சேரன் இயக்கிய ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நடித்தார்.

96 திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்தில் நடித்தும் கவனம் ஈர்த்தார். இதுவரை 35க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சர்வானந்த் நடிப்பில் இறுதியாக வெளியான பைக்கர் படமும் பாராட்டுகளைப் பெற்றுக்கொடுத்தது.

இவர், கடந்த ஆண்டு 2023 ஆம் ஆண்டு ரக்‌ஷிதா ரெட்டி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்த இணைக்கு மகள் ஒருவர் உள்ளார்.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமிலிருந்து சர்வானந்த் தன் திருமணப் புகைப்படங்களை நீக்கியுள்ளார். ஓராண்டாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்பட்டது. தற்போது, விவாகரத்து முடிவை எடுத்துள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Actor Sharwanand has deleted his wedding photos from Instagram.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.