நடிகை சாரா அர்ஜுன் தனது 9 வயதில் பேசிய விடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் துரந்தர் திரைப்படத்தின் வெற்றியின் மூலமாக இந்திய ரசிகர்களின் கவனம் பெற்றார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய சாரா அர்ஜுன் தெய்வ திருமகள் மற்றும் சைவம் படங்களில் நடித்து புகழ்பெற்றார். தற்போது, துரந்தர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி இந்தியளவில் கவனிக்கப்பட்டுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த சாரா அர்ஜுன் (20 வயது) தனது 6 வயதிலேயே திரைப்படத்தில் நடித்து அசத்தினார். அவர் தற்போது துரந்தர் வெற்றியினால் மிகவும் கவனிக்கப்பட்டும் நாயகியாக மாறியுள்ளார்.
சாரா அர்ஜுன் தனது 9 வயதிலேயே மிகவும் பக்குவமாகப் பேசிய விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த விடியோவில் உங்களது ரோல் மாடல் யார் என்ற கேள்விக்கு சாரா அர்ஜுன் பேசியிருப்பதாவது:
ஆலியா பட்டின் தோற்றமும் நடிக்கும் விதமும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆலியா, தீபிகா படுகோன் இருவரும் பிடிக்கும். அவர்கள் எனக்கு உத்வேகம் அளித்துள்ளார்கள். ஆனால், உண்மையில் நான் சாரா அர்ஜுனாகவே இருக்க விரும்புகிறேன். நான் யாரைப் போலவும் ஆக விரும்பவில்லை எனக் கூறியிருந்தார்.
சாரா அர்ஜுன் துரந்தர் படத்தினைக் குறித்து மிக நீண்ட பதிவினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதில் மறக்கப்பட்ட அனைத்து நிஜமான நாயகர்களுக்கும் நன்றி என உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.
இந்தப் படத்துக்குப் பிறகுதான் அவர் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது. இணையத்தில் சாரா அர்ஜுன் ரசிகர்கள், “9 வயதிலேயே எவ்வளவு தெளிவு, பக்குவம்” என வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள்.
Sara Arjun revealed that her inspirations among Hindi actresses are Alia Bhatt and Deepika Padukone, but she also said she wants to be â#SaraArjunâ only â¤ï¸#Dhurandhar #Dhurandhar2â #DhurandharâTheRevenge #DeepikaPadukone pic.twitter.com/VmSG5LIDJg
— Aditi (@Aditi289867132) April 26, 2026
Summary
Dhurandhar Star Sara Arjun's 9-Year-Old Video Calling Deepika Padukone, Alia Bhatt Her 'Inspiration' Goes Viral
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அஸ்ஸாமிற்கு உதவுங்கள்... ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த ஆலியா பட்!

உடைந்த இதயம் நம்பிக்கையால் சரிசெய்யப்பட்டுள்ளது... ஆலியா பட் ஆதரவு!

தும்பாட் இரண்டாம் பாகத்தில் இணைந்த ஆலியா பட்!

விமர்சனங்களால் பாதிப்பில்லை? ரூ.70 கோடியைத் தாண்டிய ஆலியா பட்டின் ஆல்பா!
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager



