FOLLOW US

ON GOOGLE DISCOVER

புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனுசென்னை புழல் சிறை முதல்வர் விஜய் திடீர் ஆய்வுமாநில அந்தஸ்து! பதவியை ராஜிநாமா செய்யவும் தயார்: புதுவை முதல்வர் என். ரங்கசாமி

மற்றொரு தெய்வீகப் படம்! அருள்நிதி நடிக்கும் வேட்ட சாமி சிறப்பு விடியோ!

நடிகர் அருள்நிதி நடிக்கும் “வேட்ட சாமி” படத்தின் சிறப்பு விடியோ வெளியாகியுள்ளது...

vetta saami

வேட்ட சாமி படத்தில் நடிகர் அருள்நிதி...

Published On :28 ஆகஸ்ட் 2026, 6:17 pm IST

நடிகர் அருள்நிதி நாயகனாக நடிக்கும் “வேட்ட சாமி” திரைப்படத்தின் முதல்பார்வை விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் கெட்டிக்காரராக அறியப்படும் நடிகர் அருள்நிதி நாயகனாக நடித்துள்ள புதிய படம் “வேட்ட சாமி”. இப்படத்தை, இயக்குநர் எம். செல்வக்குமார் இயக்கியுள்ளார்.

நடிகர்கள் அமீர், ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ஹரீஷ் பேராடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன், மைனா நந்தினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், தெய்வீகக் கதைகளத்தில் உருவாகி வரும் “வேட்ட சாமி” படத்தின் முதல் பார்வை கிளிம்ஸ் விடியோவை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இன்று (ஆக. 28) மாலை வெளியிட்டுள்ளார்.

ஏற்கெனவே, தமிழ்த் திரையுலகில் நடிகர் சிவகார்த்திகேயனின் “சேயோன்” மற்றும் நடிகர் துனுஷ் - இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் “தமிழ் முருகன்” உள்ளிட்ட படங்கள் தெய்வீகக் கதைகளத்தின் அடிப்படையில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

The first-look video of the film "Vetta Saami," starring Arulnithi in the lead role, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.