FOLLOW US

ON GOOGLE DISCOVER

எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!காவிரி ஆணைய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு! டி.கே. சிவகுமார் அறிவிப்பு! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம் மஞ்சள், சிவப்பு! தவெக கொடி நிறத்துக்கு மாறிய டிஎன்எஸ்டிசி செயலி!
/

ஓடிடியில் 5 மொழிகளில் வெளியானது விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி 2!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான கட்டா குஸ்தி 2 படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...

News image

கட்டா குஸ்தி 2 போஸ்டர். - படம்: எக்ஸ் / விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ்.

Updated On :31 ஜூலை 2026, 4:09 pm IST

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான கட்டா குஸ்தி 2 திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இன்று வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிப்பில் கடந்த ஜூலை 3 ஆம் தேதி கட்டா குஸ்தி - 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கிய இப்படத்தை வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்திருந்தது.

இந்தப் படத்தில் நடிகர்கள் கருணாஸ், காளி வெங்கட், மோக்‌ஷா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். அவர்களின் காட்சிகளும் பெரிதாக ரசிக்கப்பட்டன.

ஆண் - பெண் உறவு, திருமண உறவுகளில் இருக்க வேண்டிய நம்பிக்கை, அவரவருக்கான கனவுகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட கருத்துகளுடன் நகைச்சுவை பாணியில் இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

இப்படம் உலகளவில் ரூ. 55 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று முதல் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. இந்த வாரத்தில் பல படங்களில் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

Summary

Vishnu Vishal's Gatta Kusthi 2 has been released on OTT!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.