இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

எல்லாமே அவதூறு... ரவி மோகனுக்கு பதிலளித்த மாமியார்!

ரவி மோகன் பேச்சுக்கு சுஜாதா விஜயகுமார் பதில்...

News image

சுஜாதா விஜயகுமார், ரவி மோகன்

Updated On :17 மே 2026, 12:28 pm IST

நடிகர் ரவி மோகனின் பேச்சுக்கு அவரது மாமியார் சுஜாதா விஜயகுமார் பதிலளித்துள்ளார்.

நடிகர் ரவி மோகன் தன் விவாகரத்து முடிவு குறித்து அளித்த பேட்டியில், “எனது பிள்ளைகளைப் பார்க்க விடுவதில்லை. எப்போதும் பாதுகாவலர்களுடனே வருகிறார்கள். கையை அறுத்துக்கொள்வேன் என ஆர்த்தி மிரட்டித்தான் என்னைத் திருமணம் செய்தார். பல ஆண்டுகளாக அவர்களின் வீட்டில் மரியாதை இழந்து வாழ்ந்து வந்தேன். என் அம்மா, அப்பா இந்தக் குடும்பமே வேண்டாம் என கெஞ்சினார்கள். யார் பேச்சையும் கேட்காமல் போய் சிக்கிகொண்டேன். என் முன்னாள் மனைவியின் குடும்பத்தின் தொல்லையால் தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன். என் மகன்களை நான் பார்க்க வேண்டும். எப்போது விவாகரத்து கிடைக்கிறதோ அதன்பின்பே சினிமாவில் நடிப்பேன்” என கண்ணீர் மல்க பேசியிருந்தார். இதனால், பலரும் ரவி மோகனுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், இவரின் பேச்சுக்குப் பதிலளிக்கும் விதமாக ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் பேட்டியளித்தார். அதில், “ஏற்கனவே நீதிமன்றத்தில் இருக்கும் விஷயங்களை இப்போது மீண்டும் பேசியுள்ளார். எல்லாமே அவதூறுகள்தான். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், இதுகுறித்து அதிகம் பேசவும் முடியவில்லை. நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர் சொன்னதற்கு கண்டிப்பாக பதிலளிப்போம். இதை பெரிதுபடுத்த வேண்டாம் என நாங்கள் நினைப்பதற்கு காரணம், எங்கள் பேரன் 10 ஆம் வகுப்பு தேர்வுக்குத் தயாராகி வருகிறார். பேரன்கள் மன உளைச்சலில் இருக்கின்றனர். மேலும், அவர்களைக் காயப்படுத்தக் கூடாது என்பதால்தான் இதனைப் பெரிதுபடுத்தவில்லை.

எங்கள் தரப்பிலிருந்து கடந்த 2 ஆண்டுகளாக எதுவும் இதுகுறித்து பேசுவதில்லை. நாங்கள் சைபர் தாக்குதல்களையும் செய்யவில்லை. 2008 ஆம் ஆண்டு நேர்காணல் ஒன்றில், ரவி மோகன் தன் திருமணம் குறித்து பேசியுள்ளார். மிரட்டிலில் இந்தத் திருமணம் நடக்கவில்லை. அதில் அவரே தன் திருமணம் குறித்து பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் ஒரு பெண்ணுக்கு அநீதி நடந்தால் மற்ற பெண்கள் துணைக்கு வருவார்கள். குஷ்பு ஆதரவு தெரிவித்தது அதனால்தான். சட்டப்படி இதனை நாங்கள் எதிர்கொள்வோம்.” எனக் கூறியுள்ளார்.

sujatha vijayakumar answered to actor ravi mohan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.