தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்துவிட்டு பேசிய நடிகர் வசந்த் ரவி ‘தனி நபரின் சக்தியைக் காட்டுங்கள்’ எனத் தெரிவித்தார்.
தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்.23) ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பல்வேறு முக்கிய தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்பட மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்கு செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே, சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கைச் செலுத்திய பிறகு, நடிகர் வசந்த் ரவி கூறுகையில், "இன்று எனது வாக்கைச் செலுத்தியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இது மிகவும் முக்கியமான தேர்தல், எனவே தமிழக மக்கள் அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நமது தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ஒரே வாய்ப்பு இதுதான். அதனால் இது மிகவும் முக்கியமானது.
இன்னும் வாக்களிக்காதவர்கள், தயவுசெய்து முன்வந்து, உங்கள் உரிமையைப் பயன்படுத்தி, ஒரு தனிநபரின் சக்தியைக் காட்டுங்கள். அனைவரும் தங்கள் வாக்கைச் செலுத்துங்கள். உங்கள் கடமையை நிறைவேற்றுங்கள்" எனத் தெரிவித்தார்.
Summary
Speaking after casting his vote in the Tamil Nadu Assembly elections, actor Vasanth Ravi urged people to demonstrate the power of the individual.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மமதா பதவி விலக மறுப்பு... மேற்கு வங்க சட்டப்பேரவையைக் கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!
ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி! ஏன்?
அறிமுக இயக்குநருடன் இணையும் ரவி மோகன்!
தனுஷ் - 56 படத்திலிருந்து விலகிய ருக்மணி வசந்த்?
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு


