நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

உறங்கும் சிங்கம் எனப் பதிவிட்ட ஆர்த்தி..! ஆதரவாக கமெண்ட் செய்த குஷ்பு!

நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தியின் இன்ஸ்டா பதிவு குறித்து...

News image

ஆர்த்தி ரவி, குஷ்பு சுந்தர். - படங்கள்: இன்ஸ்டா / ஆர்த்தி ரவி, குஷ்பு சுந்தர்.

Updated On :16 மே 2026, 4:18 pm IST

நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டா பதிவில், ”தூங்கும் சிங்கத்தை எழுப்பக் கூடாது” எனக் கூறியுள்ளார். இந்தப் பதிவில் நடிகை குஷ்பு கமெண்ட் செய்துள்ளது வைரலாகியுள்ளது.

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை 2024 செப்டம்பரில் விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். இருப்பினும் இவர்களது வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இந்த நிலையில், கெனிஷா தனக்கு ஏற்பட்ட சைபர் தாக்குதலால் சென்னையை விட்டும் ரவியை விட்டும் விலகுகிறேன் எனக் கூறியிருந்தார். இதற்கு ரவி மோகனும் பேட்டி அளித்திருந்தார்.

ஆர்த்தி தனது இன்ஸ்டா பக்கத்தில், “தூங்குகிற சிங்கத்தை எழுப்பக்கூடாது. அவள் சிங்கப்பெண்ணாக இருந்தால் கடவுள் உதவுவார். எனது மரியாதையான அமைதி பலவீனமென தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது அல்லது அதனை சாதகமாக பயன்படுத்தக்கூடாது.

எனது குழந்தைகளுக்காகவும் எனது மரியாதையைக் காப்பதற்காகவும் தேவைப்பட்டால் எனது சௌகரியமான இடத்தைவிட்டு வெளியே வந்து, உண்மையுடன் உலகைச் சந்திப்பேன். ஏனெனில், உண்மைதான் எப்போதும் வெல்லும்” எனக் கூறியுள்ளார்.

இந்தப் பதிவில் நடிகை குஷ்பு, “தாயுடன் எப்போதும் மோதாதீர்கள். நீ சிங்கக் குட்டியுடன் இருக்கும் பெண் சிங்கம். உனது கூடுதல் பலம் கிடைக்கட்டும் பேபி” எனக் கமெண்ட் செய்துள்ளார்.

Summary

You never wake a sleeping lion aarti ravi and kushboo comments

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.