திரிஷ்யம் - 3 திரைப்படத்தின் முன் வெளியீட்டு வணிகம் கவனம் ஈர்த்துள்ளது.
மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப்புடன் மோகன்லால் இணைந்து அவர்களது கூட்டணியில் வெளியான திரிஷ்யம் பட்டி தொட்டியெங்கும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது, இதன் மூன்றாவது பாகம் நாளை (மே 21) வெளியாகிறது. நாயகன் ஜார்ஜ் குட்டி, தன் குடும்பத்தை பிரச்னையிலிருந்து மீட்டாரா, இல்லையா என்கிற முடிவுடன் திரிஷ்யம் நிறைவடைகிறது. இதன் அடுத்த பாகம் உருவாகவாது என இயக்குநரும் அறிவித்துவிட்டார்.

இந்த நிலையில், டிக்கெட் முன்பதிவுகளிலேயே இப்படம் விரைவாக ரூ. 22.5 கோடி வரை வசூலித்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்பதிவுகள் நடைபெற்று வருவதால் இப்படம் முதல் நாளிலேயே ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
The pre-release business of the film Drishyam 3 has garnered attention.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








