ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

ஏப்.19-ல் தனுஷின் கர படத்தின் முன் வெளியீட்டு விழா!

நடிகர் தனுஷின் “கர” திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா அறிவிப்பு...

dhanush

கர படத்தில் நடிகர் தனுஷ்...

Published On :

நடிகர் தனுஷின் “கர” திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா வரும் ஏப். 19 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போர் தொழில் திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்துள்ள புதிய படம் “கர”. எழுத்தாளர் ஆல்ஃபிரட் பிரகாஷ் இப்படத்துக்குத் திரைக்கதை எழுதியுள்ளார்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையில், 90-களில் நடைபெறும் வங்கிக் கொள்ளையைப் பற்றிய கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. 

இத்துடன், இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், கே.எஸ். ரவிக்குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, பிருத்விராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், கர திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 19) சென்னை ஜவஹர்லால் உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, வரும் ஏப்ரல் 30 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள “கர” படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

Summary

the pre-release event for actor Dhanush's film “Kara” will be held on April 19th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.