
தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலித்த கருப்பு!
கருப்பு திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலித்தது குறித்து...

ரூ. 100 கோடி வசூலித்த கருப்பு - படம் - எக்ஸ்
கருப்பு திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் கடந்த மே 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சாய் அபயங்கர் இசையமைத்திருக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
ஆரம்பம் முதலே உயர்ந்துகொண்டு இருக்கும் இந்தப் படத்தின் வசூல் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடியை எட்டியுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே, உலகளவில் படத்தின் வசூல் ரூ. 207 கோடியைக் கடந்ததாகவும் படக்குழு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்த திரைப்படம் விரைவில் ரூ. 300 கோடியைக் கடந்து, சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகச்சிறந்த வசூல்செய்த திரைப்படமாக இந்தப் படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், விடுமுறை நாள்கள் மட்டுமல்லாமல் வேலை நாள்களிலும் இந்தப் படத்தைப் பார்க்க மக்கள் ஆர்வம்காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Live Box Office Update ð
— Sakthi Film Factory (@SakthiFilmFctry) May 22, 2026
Adichi Thooku saamyð¥
Tamil Nadu BOX OFFICE belongs to THE ONE @Suriya_offl âs #Karuppu right now ð¥
A thunderous â¹100 CR GROSS milestone conquered on Day 8 ð¥
2nd weekend sambavam loading⦠ð
A proud Sakthi Film Factory Release â¨#Karuppu⦠pic.twitter.com/vAtA8W9Hts
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





