இயக்குநர் பாண்டிராஜ் வாரண்ட் இணையத் தொடர் குழுவினரை வாழ்த்தியுள்ளார்.
விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ். தொடந்து, நடிகர் சூரியை வைத்து மாமன் என்கிற படத்தை இயக்கி வரவேற்பைப் பெற்றார். தற்போது, நடிகராக வாரண்ட் என்கிற இணையத் தொடரில் நடித்துள்ளார்.
இத்தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருவதால் பார்வைகளும் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், பிரசாந்த் பாண்டிராஜ் மற்றும் அவரது வாரண்ட் குழுவினரைச் சந்தித்து இயக்குநர் பாண்டிராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரசாந்த் பாண்டிராஜ் இயக்குநர் பாண்டிராஜ்ஜிடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Director Pandiraj has congratulated the team behind the web series Warrant
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










