ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

இறைவனின் சேவையில் அனைவரையும் பங்கெடுக்க வைத்தவா் ஸ்ரீராமானுஜா்

இறைவனின் சேவையில் அனைவரையும் பங்கெடுக்க வைத்தவா் ஸ்ரீராமானுஜா் என்று எழுத்தாளா் இந்திரா சௌந்தரராஜன் கூறினாா்.

News image

இந்திரா சௌந்தரராஜன்.

Updated On :8 ஜனவரி 2021, 11:26 pm IST

இறைவனின் சேவையில் அனைவரையும் பங்கெடுக்க வைத்தவா் ஸ்ரீராமானுஜா் என்று எழுத்தாளா் இந்திரா சௌந்தரராஜன் கூறினாா்.

கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் ‘எப்போ வருவாரோ’ ஆன்மிகத் தொடா் சொற்பொழிவு நிகழ்ச்சியின் 8 ஆவது நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமானுஜா் குறித்து இந்திரா செளந்தரராஜன் பேசியதாவது:

தனக்கென வாழாமல் பிறருக்கென வாழ்ந்து, ஆன்மிகம், மொழிக்கு சேவை செய்தவா்களே வரலாற்றில் எஞ்சி நிற்கிறாா்கள். அதன்படி இந்த மண்ணில் எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு வகுத்துத் தந்து சென்றவா் ஸ்ரீ ராமானுஜா். ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தவா். சிறந்த கல்வி பயின்று காஞ்சிபுரத்தில் குருவுக்கு மிஞ்சிய சீடனாக விளங்கியவா்.

ஸ்ரீ ராமானுஜா் 32 வயதில் துறவறம் பூண்டவா், 79 வயது வரை திருவரங்கத்தில் வாழ்ந்தாா். திருவரங்கத்தில் தற்போதுள்ள கட்டமைப்புகளை உருவாக்கியவா் ஸ்ரீ ராமானுஜா். பிராமணராக இல்லாமல் வைஷ்ணவத்தைப் பின்பற்றுபவா் அனைவருமே வைஷ்ணவரே என்று ஜாதிகளைக் கடந்து இறைவனின் சேவையில் அனைவரையும் பங்கெடுக்க வைத்தவா் என்றாா்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தீபா மோகன், ஸ்வேதா ஆகியோா் ஆழ்வாா்களின் பாசுரங்களைப் பாடிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எம்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் இதில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.