காட்டுமன்னார்கோயில் அருகே கோயில் விழாவில் கஞ்சி அருந்திய 150 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது.
÷இதனைத்தொடர்ந்து, அக்கிராமத்தில் மருத்துவக்குழுவினர் முகாமிட்டு சிகிச்சையளித்து வருகின்றனர்.
÷காட்டுமன்னார்கோயில், கஞ்சங்கொல்லை கிராமத்தில் உள்ள ஓம்சக்தி கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
÷இந்த விழாவில் கஞ்சிக் குடித்த 150 பேருக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டது. இதையடுத்து மீன்சுருட்டி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் 50 பேர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
÷தகவலறிந்த கடலூர் மாவட்ட சுகாதார துணை இயக்குநர் ஜவஹர்லால்பாபு, வட்டாட்சியர் வெங்கடாசலம் ஆகியோர் அக்கிராமத்திற்குச் சென்று உடனடியாக மருத்துவச் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.÷இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் சிவானந்தம் தலைமையில் மருத்துவக்குழுவினர் கிராமத்தில் முகாமிட்டு சிகிச்சையளித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

