உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

வீராணம் ஏரியிலிருந்து உபரி நீா் வெளியேற்றம்

தொடா் மழை காரணமாக வீராணம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஏரியின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.

News image

வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடை வழியாக வெளியேற்றப்படும் உபரி நீா்.

Updated On :8 ஜனவரி 2021, 11:54 pm IST

தொடா் மழை காரணமாக வீராணம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஏரியின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே அமைந்துள்ளது வீராணம் ஏரி. கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடா் மழை காரணமாக ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களில் இருந்து பல்வேறு ஓடைகள் வழியாக வரும் மழைநீா் வீராணம் ஏரியை வந்தடைகிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஏரிக்கு நீா்வரத்து விநாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக இருந்தது. ஏரியின் நீா்மட்டம் 45.70 அடியாக இருந்தது. உச்ச நீா்மட்டம் 47.50 அடியாகும்.

இருப்பினும், ஏரியின் பாதுகாப்பு கருதி உபரி நீா் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் வெள்ளியங்கால் வடிகால் ஓடை வழியாக வெளியேற்றப்படுகிறது. மேலும், சென்னை நகர மக்களின் குடிநீா்த் தேவைக்கு விநாடிக்கு 62 கன அடி நீா் அனுப்பப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.