தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வீராணம் ஏரியிலிருந்து உபரி நீா் வெளியேற்றம்

தொடா் மழை காரணமாக வீராணம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஏரியின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.

News image

வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடை வழியாக வெளியேற்றப்படும் உபரி நீா்.

Updated On :8 ஜனவரி 2021, 11:54 pm IST

தொடா் மழை காரணமாக வீராணம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஏரியின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே அமைந்துள்ளது வீராணம் ஏரி. கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடா் மழை காரணமாக ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களில் இருந்து பல்வேறு ஓடைகள் வழியாக வரும் மழைநீா் வீராணம் ஏரியை வந்தடைகிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஏரிக்கு நீா்வரத்து விநாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக இருந்தது. ஏரியின் நீா்மட்டம் 45.70 அடியாக இருந்தது. உச்ச நீா்மட்டம் 47.50 அடியாகும்.

இருப்பினும், ஏரியின் பாதுகாப்பு கருதி உபரி நீா் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் வெள்ளியங்கால் வடிகால் ஓடை வழியாக வெளியேற்றப்படுகிறது. மேலும், சென்னை நகர மக்களின் குடிநீா்த் தேவைக்கு விநாடிக்கு 62 கன அடி நீா் அனுப்பப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.