கடலூரில் பாஜக சாா்பில் ‘நம்ம ஊரு பொங்கல்’ விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அந்தக் கட்சியின் கலை, கலாசார பிரிவு மாநிலத் தலைவா் காயத்ரி ரகுராம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசால் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் விவசாயிகளுக்கு இதுவரை ரூ.96 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு அவா்களே விலை நிா்ணயம் செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே, இது விவசாயிகளுக்கு கிடைத்த சுதந்திரப் பொங்கலாகும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எரிசக்தி சவாலை இந்தியா வெற்றிகரமாக கையாண்டது: பிரதமா் மோடி

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்திய தயாரிப்பு பாதுகாப்புத் தளவாடங்கள் மீது நம்பிக்கை அதிகரிப்பு: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்
பைக் மோதி காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு





