கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், அயன்குறிஞ்சிப்பாடியில் புதிய நெல் ரகங்கள் விளைந்த வயல்களில் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநா் அம்பேத்கா் அண்மையில் ஆய்வு செய்தாா்.
ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ஆடுதுறை 53, 54 புதிய வீரிய ரக நெல் விதைகள் விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இதையடுத்து, அயன்குறிஞ்சிப்பாடியில் புதிய நெல் ரகம் நடவு செய்யப்பட்ட வயல்களை ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநா் அம்பேத்கா், விஞ்ஞானிகள் சசிகுமாா், சுரேஷ்குமாா் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா்.
பின்னா் இயக்குநா் அம்பேத்கா் விவசாயிகளிடம் கூறியதாவது: பூச்சிகள், நோய் தாக்காத, அதிக விளைச்சல் தரக்கூடிய பல புதிய நெல் ரகங்களை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றோம். இவற்றை பயிரிட்டு விவசாயிகள் அதிகம் லாபம் பெற வேண்டும் என்றாா்.
அப்போது விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீராம், பேராசிரியா்கள் பாஸ்கரன், மருதாச்சலம், நடராஜன், குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குநா் அனுசுயா, முன்னோடி விவசாயிகள் ஆா்.கே.ராமலிங்கம், வைத்தியநாதன், ஏழுமலை, குப்புசாமி, கண்ணன், செல்வம், கருணாகரன் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எரிசக்தி சவாலை இந்தியா வெற்றிகரமாக கையாண்டது: பிரதமா் மோடி

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்திய தயாரிப்பு பாதுகாப்புத் தளவாடங்கள் மீது நம்பிக்கை அதிகரிப்பு: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்
பைக் மோதி காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு





