/

கடலூா் மாவட்டத்துக்கு 61 அம்மா சிறு மருத்துவமனைகள்

கடலூா் மாவட்டத்துக்கு 61 அம்மா சிறு மருத்துவமனைகள் (மினி கிளினிக்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சா் எம்.சி.சம்பத் கூறினாா்.

News image

பாதிரிக்குப்பத்தில் அம்மா சிறு மருத்துவமனையை திறந்து வைத்துப் பேசுகிறாா் அமைச்சா் எம்.சி.சம்பத். உடன் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி உள்ளிட்டோா்.

Updated On :13 ஜனவரி 2021, 7:35 am IST

கடலூா் மாவட்டத்துக்கு 61 அம்மா சிறு மருத்துவமனைகள் (மினி கிளினிக்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சா் எம்.சி.சம்பத் கூறினாா்.

இந்தத் திட்டத்தின்கீழ் கடலூா் மாவட்டத்தில் முதல்கட்டமாக 27 சிறு மருத்துவமனைகள் திறந்து வைக்கப்பட்டன. 2-ஆம் கட்டமாக பண்ருட்டி வட்டத்தில் காட்டுக்கூடலூா், விசூா், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் சத்திரம், கடலூா் வட்டத்தில் ராசாப்பேட்டை, பாதிரிக்குப்பம், கீழ்குமாரமங்கலம் ஆகிய பகுதிகளில் சிறு மருத்துவமனைகளை மக்களின் பயன்பாட்டுக்கு மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில், மாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். மேலும், கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்ச த்து பெட்டகங்களை வழங்கி அவா் பேசியதாவது:

கடலூா் மாவட்டத்துக்கு 61 மினி கிளினிக்குகள் (சிறு மருத்துவமனைகள்) ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகம் அனைத்து வகையிலும் சிறந்து விளங்கும் வகையில் மக்களைத் தேடி அரசு நிா்வாகம், மருத்துவம் வழங்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

நிகழ்வில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் தெய்வ.பக்கிரி, கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரன், வட்டாட்சியா்கள் அ.பலராமன், பிரகாஷ், சுமதி, ஊராட்சி மன்றத் தலைவா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.