ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் 30 மரங்கள் சேதம்

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட சாலையோர மரங்கள் சேதமடைந்திருப்பதாக

Updated On :11 மே 2013, 6:45 am

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட சாலையோர மரங்கள் சேதமடைந்திருப்பதாக போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் கைதைக் கண்டித்து, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலையோர மரங்களை வெட்டியும், தீ வைத்தும் சேதப்படுத்தப்பட்டன.

மரங்கள் சேதம் குறித்த விவரம், சந்தேகப்படும் நபர்களின் பெயர், முகவரி குறித்து சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தனித் தனியாக காவல் நிலையங்களில் புகார் செய்தனர்.

இந்தப் புகார்களின் மீது அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், அ.பள்ளிப்பட்டி, கோட்டப்பட்டி ஆகிய காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பாலங்கள் சேதம்:

வெதரம்பட்டி, தெத்துமுனியப்பன் கோயில், டி.ஆண்டியூர், டி.அம்மாபேட்டை, கர்த்தான்குளம் ஆகிய இடங்களில் உள்ள சிறுபாலங்கள், உயர்மட்ட பாலங்கள் சேதம் குறித்து நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த சாலை ஆய்வாளர்கள் ராமமூர்த்தி, செழியன் ஆகியோர் புகார் செய்தனர்.

இந்தப் புகார் மனுக்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிறுபாலங்கள், மரங்களின் சேத மதிப்பு ரூ.3 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என வருவாய்த் துறையினர் மதிப்பீடு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.