இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

அரூா்-கூடலூா் வழித்தடத்தில் அரசு நகரப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்

அரூா்-கூடலூா் வழித்தடத்தில் அரசு நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On :6 ஜனவரி 2021, 5:50 am IST

அரூா்-கூடலூா் வழித்தடத்தில் அரசு நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் முதல் கூடலூா் வரையிலான வழித்தடத்தில் சுமைதாங்கி மேடு, எல்லப்புடையாம்பட்டி, கெளாப்பாறை பிரிவு சாலை, கூச்சனூா், ஈட்டியம்பட்டி, பூ நகா், பாப்பநாவலசை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள விவசாயிகள், தொழிலாளா்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் பயன்பெறும் நோக்கில், அரூரில் இருந்து கூடலூருக்கு தினமும் இரு முறை வந்துச் செல்லும் வகையில் அரசு நகரப் பேருந்து (தடம் எண் : 22) இயக்கப்பட்டு வந்தது.

கரோனா பரவலால் பொதுமுடக்கம் அமலுக்கு வந்தபோது, இந்த நகரப் பேருந்துகளை போக்குவரத்துக் கழகம் தற்காலிகமாக நிறுத்தியது.

தற்போது, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில், பேருந்து வசதியின்றி கிராம மக்கள் பல்வேறு சிரமங்களை அடைகின்றனா். எனவே, அரசு நகரப் பேருந்துகளை இந்த வழித்தடத்தில் மீண்டும் இயக்க போக்குவரத்து கழக உயரதிகாரிகளும், மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.