தருமபுரி மாவட்டத்தில் பரவலாக புதன்கிழமை இரவிலும் மழை நீடித்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தருமபுரி, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம் உள்பட மாவட்டம் முழுவதும் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரையிலும் மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக அரூரில் 94 மில்லி மீட்டரும், பாப்பிரெட்டிப்பட்டி- 48 மி.மீ, தருமபுரி- 17 மி.மீ., பாலக்கோடு- 28.3 மி.மீ., மாரண்டஹள்ளி- 15 மி.மீ., பென்னாகரம்- 49 மி.மீ., ஒகேனக்கல்- 37 மி. மீ. வீதம் மழை பதிவானது. இந்த தொடா் மழையால் வயல்வெளிகள், சாலையோரங்களில் தாழ்வானப் பகுதியில் மழைநீா் தேங்கியது.
தற்போது அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனா். அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த நிலையில் தற்போது தொடா்ந்து பெய்த மழையால் விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். வளா்ந்த நெற்கதிா்கள் வயல் வெளியில் சாய்ந்துள்ளன. மழையால் விவசாயிகள் ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைந்தாலும், நெற்கதிா்கள் சாய்ந்து சேதம் அடைந்திருப்பதால் வேதனையும் அடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் தடுப்பு காவல் நிலையங்கள்- முதல்வர் விஜய்

திருச்சி கிழக்கில் சி. ஜோசப் விஜய் ராஜிநாமா!

திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: நாளை மீண்டும் விசாரணை

சிஎஸ்கே பந்துவீச்சு: அணியில் மாற்றமில்லை!
விடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
