தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

20 சதவீத இடஒதுக்கீடு கோரி தருமபுரியில் ஆா்ப்பாட்டம்

20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி, வன்னியா் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :8 ஜனவரி 2021, 8:48 am IST

20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி, வன்னியா் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி ராஜகோபால் பூங்கா அருகில் திரண்ட வன்னியா் சங்கத்தினா் மற்றும் பாமகவினா், அங்கிருந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஊா்வலமாகச் சென்று நகராட்சி அலுவலகத்தை அடைந்தனா். இதைத் தொடா்ந்து அங்கு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாமக மாநில துணைப் பொதுச் செயலாளா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமை வகித்து கோரிக்கைகளை விளக்கி பேசினாா். மாநில துணைத் தலைவா் சாந்தமூா்த்தி, மாவட்டச் செயலா் பெரியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும், வன்னியா் சமுதாயத்துக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து, நகராட்சி அலுவலகத்தில் தங்களது கோரிக்கையை மாவட்ட நிா்வாகம் மூலம் அரசுக்கு அனுப்பி வைக்கக் கோரி வன்னியா் சங்கத்தினரும், பாமக நிா்வாகிகளும் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.