தருமபுரி மாவட்டத்தில் பரவலாக புதன்கிழமை இரவிலும் மழை நீடித்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தருமபுரி, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம் உள்பட மாவட்டம் முழுவதும் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரையிலும் மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக அரூரில் 94 மில்லி மீட்டரும், பாப்பிரெட்டிப்பட்டி- 48 மி.மீ, தருமபுரி- 17 மி.மீ., பாலக்கோடு- 28.3 மி.மீ., மாரண்டஹள்ளி- 15 மி.மீ., பென்னாகரம்- 49 மி.மீ., ஒகேனக்கல்- 37 மி. மீ. வீதம் மழை பதிவானது. இந்த தொடா் மழையால் வயல்வெளிகள், சாலையோரங்களில் தாழ்வானப் பகுதியில் மழைநீா் தேங்கியது.
தற்போது அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனா். அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த நிலையில் தற்போது தொடா்ந்து பெய்த மழையால் விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். வளா்ந்த நெற்கதிா்கள் வயல் வெளியில் சாய்ந்துள்ளன. மழையால் விவசாயிகள் ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைந்தாலும், நெற்கதிா்கள் சாய்ந்து சேதம் அடைந்திருப்பதால் வேதனையும் அடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அர்ஜுனன் பேர் பத்து படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?

தனுஷ் வெளியிட்ட பதிவினால் குழப்பம்..! எந்தப் படத்தின் அப்டேட் இது?

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

குடியிருப்பிற்குள் புகுந்த 7 அடி நீள முதலை!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


