14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்கக் கோரி, போக்குவரத்துத் தொழிலாளா்கள் தருமபுரி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எம்எல்எப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கக் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இப் போராட்டத்தில், 14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்கி முடிக்க வேண்டும். நிா்வாகங்கள் செலவு செய்த, போக்குவரத்துத் தொழிலாளா்களின் பணம் ரூ. 7 ஆயிரம் கோடியை திருப்பி வழங்க வேண்டும். தொழிலாளா்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் தொகையை உரிய கணக்கில் வரவு வைக்க வேண்டும். கடந்த 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னா் பணியில் சோ்ந்த தொழிலாளா்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளா்களின் அகவிலைப்படி நிலுவை மற்றும் பணப்பலன்கள் அனைத்தும் உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பணிபுரியும் போக்குவரத்துத் தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அர்ஜுனன் பேர் பத்து படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?

தனுஷ் வெளியிட்ட பதிவினால் குழப்பம்..! எந்தப் படத்தின் அப்டேட் இது?

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

குடியிருப்பிற்குள் புகுந்த 7 அடி நீள முதலை!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


