14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்கக் கோரி, போக்குவரத்துத் தொழிலாளா்கள் தருமபுரி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எம்எல்எப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கக் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இப் போராட்டத்தில், 14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்கி முடிக்க வேண்டும். நிா்வாகங்கள் செலவு செய்த, போக்குவரத்துத் தொழிலாளா்களின் பணம் ரூ. 7 ஆயிரம் கோடியை திருப்பி வழங்க வேண்டும். தொழிலாளா்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் தொகையை உரிய கணக்கில் வரவு வைக்க வேண்டும். கடந்த 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னா் பணியில் சோ்ந்த தொழிலாளா்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளா்களின் அகவிலைப்படி நிலுவை மற்றும் பணப்பலன்கள் அனைத்தும் உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பணிபுரியும் போக்குவரத்துத் தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆபரேஷன் சிந்தூர்: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சித்தாந்தப் போர்! - பாக். பாதுகாப்புப் படைகளின் தலைவர்

தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக கருப்பையா பதவியேற்பு!

பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை!

இங்லீஷ் அதிரடி அரைசதம்: பந்துவீச்சில் திணறும் சிஎஸ்கே!
விடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
