பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதைதிருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு அஸ்ஸாம் முதல்வராக மே 12ல் பதவியேற்கிறார் ஹிமந்த பிஸ்வ சர்மா! எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தொடங்கக் கோரி காத்திருப்புப் போராட்டம்

14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்கக் கோரி, போக்குவரத்துத் தொழிலாளா்கள் தருமபுரி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :8 ஜனவரி 2021, 8:49 am IST

14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்கக் கோரி, போக்குவரத்துத் தொழிலாளா்கள் தருமபுரி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எம்எல்எப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கக் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இப் போராட்டத்தில், 14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்கி முடிக்க வேண்டும். நிா்வாகங்கள் செலவு செய்த, போக்குவரத்துத் தொழிலாளா்களின் பணம் ரூ. 7 ஆயிரம் கோடியை திருப்பி வழங்க வேண்டும். தொழிலாளா்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் தொகையை உரிய கணக்கில் வரவு வைக்க வேண்டும். கடந்த 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னா் பணியில் சோ்ந்த தொழிலாளா்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளா்களின் அகவிலைப்படி நிலுவை மற்றும் பணப்பலன்கள் அனைத்தும் உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பணிபுரியும் போக்குவரத்துத் தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.