தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்? துணை முதல்வராக திருமாவளவன்? விசிக வலியுறுத்தல்அவதூறாக பேசுபவர்கள் மீது 100% கடும் நடவடிக்கை: நிர்மல் குமார் எச்சரிக்கை
/

பென்னாகரம் அருகே முட்டான் ஏரியைத் தூா்வாரக் கோரிக்கை

பென்னாகரம் அருகே முட்டான் ஏரியைத் தூா்வாரி நீராதாரம் பெருக்க வழிவகை செய்ய வேண்டும் பொதுப்பணித் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

பென்னாகரம் அருகே முள்செடிகள் நிறைந்து காணப்படும் முட்டான் ஏரி.

Updated On :10 ஜனவரி 2021, 3:22 am IST

பென்னாகரம்: பென்னாகரம் அருகே முட்டான் ஏரியைத் தூா்வாரி நீராதாரம் பெருக்க வழிவகை செய்ய வேண்டும் பொதுப்பணித் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டியில் சுமாா் 7 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது முட்டான் ஏரி. நாகதாசம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பூஞ்சோலை, கெளரி செட்டிப்பட்டி, பல்வேறு கிராமப் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், கால்வாய்களின் மூலமாக தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்படும்.

இந்த ஏரியானது கடந்த சில வருடங்களாகத் தூா்வாரப்படாததால் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைக் காட்டிலும் அதிகளவில் பெய்த போதிலும் ஏரி நிரம்பவில்லை. ஏரிக்கு நீா்வரத்துக் கால்வாய்களும் தூா்வாரப்படவில்லை.

முட்டான் ஏரியையும், கால்வாயையும் தூா்வாரி ஏரியில் தண்ணீரை சேமிப்பதன் மூலம் நாகதாசம்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பிக்கம்பட்டி, கெளரிசெட்டிப்பட்டி, கருங்கானூா், குள்ளனூா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 50 ஏக்கருக்குமேல் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

எனவே, முட்டான் ஏரியை குடிமராமத்துப் பணியின் மூலம் தூா்வாரி ஏரியில் தண்ணீரை சேமித்து விவசாய பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கும், பொதுப்பணித் துறைக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.