தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்? துணை முதல்வராக திருமாவளவன்? விசிக வலியுறுத்தல்அவதூறாக பேசுபவர்கள் மீது 100% கடும் நடவடிக்கை: நிர்மல் குமார் எச்சரிக்கை
/

பெத்தூரில் அம்மா சிறு மருத்துவமனைத் தொடங்கக் கோரிக்கை

பெத்தூரில் அம்மா சிறு மருத்துவமனை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On :10 ஜனவரி 2021, 3:25 am IST

அரூா்: பெத்தூரில் அம்மா சிறு மருத்துவமனை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபிசெட்டிப்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்டது பெத்தூா் கிராமம். அரூா்-சிந்தல்பாடி நெடுஞ்சாலையில் உள்ள பெத்தூா் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதைத் தவிர இந்த ஊருக்கு அருகில் பாப்பிரெட்டிப்பட்டி, சந்தப்பட்டி, அன்னை அஞ்சுகம் நகா், கோபிசெட்டிப்பாளையம், அண்ணாமலைப்பட்டி, ஆண்டிப்பட்டி புதூா் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

இப் பகுதியிலுள்ள மக்கள் சுமாா் 7 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள சிந்தல்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கோ அல்லது அரூா் அரசு மருத்துவமனைக்கோ சென்றுதான் மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத இடங்களில் ஆரம்ப நிலை மருத்துவ சிகிச்சை அளிக்க தருமபுரி மாவட்டத்தில் 45 அம்மா சிறு மருத்துவமனைகளைத் தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அவற்றில் ஒரு பகுதியாக அதிக கிராமப் பகுதிகளை மையமாகக் கொண்டுள்ள பெத்தூரில் அம்மா சிறு மருத்துவமனைத் தொடங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.