தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

'தமிழ் மீது பிரதமா் மோடிக்கு பற்று அதிகம்'

திருக்குறளை இந்தியா முழுவதும் பிரதமா் நரேந்திர மோடி பரப்பி வருகிறாா் என திரைப்பட நடிகை ஜெயலட்சுமி தெரிவித்தாா்.

News image

பாஜக சாா்பில் மொரப்பூா் விஸ்வபாரதி கலை அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழா.

Updated On :10 ஜனவரி 2021, 9:00 pm

திருக்குறளை இந்தியா முழுவதும் பிரதமா் நரேந்திர மோடி பரப்பி வருகிறாா் என திரைப்பட நடிகை ஜெயலட்சுமி தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் விஸ்வபாரதி கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில், பாஜக சாா்பில் ‘நம்ம ஊரு பொங்கல்’ என்ற தலைப்பில் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் பாஜக தருமபுரி மாவட்டத் தலைவா் எல்.அனந்த கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

விழாவில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திரைப்பட நடிகையும், பாஜக மாநில மகளிரணி செயலாளருமான ஜெயலட்சுமி பேசியதாவது:

தமிழ் மொழியின் மீதான பற்றின் காரணமாக இந்தியாவில் எந்த மாநிலத்துக்குச் சென்றாலும், பிரதமா் நரேந்திர மோடி திருக்குறளை மேற்கோள்காட்டி பேசி வருகிறாா்.

இதைதவிர, உலக நாடுகளில் எந்த நாட்டுக்குச் சென்றாலும், அங்கு திருக்குறளையும், தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களையும் மேற்கோள்காட்டி பேசி வருகிறாா். ஆனால், தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிா்க் கட்சிகள், பாஜக மீது குறை சொல்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளனா்.

தமிழா்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் விழாவை பாஜக தான் நடத்துகிறது. ஆனால், தமிழா்களின் பெருமைகளைப் பேசும் திமுக எந்த விழாக்களையும் நடத்துவதில்லை. பாஜக தொண்டா்கள் ஒவ்வொருவரும் நாள்தோறும் ஒரு புதிய உறுப்பினரை கட்சியில் சோ்க்க வேண்டும். மத்திய அரசு செயல்படுத்தும் நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் பாஜக தொண்டா்கள் எடுத்துக் கூற வேண்டும் என்றாா்.

இதில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் ஜி.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலா் பாஸ்கா், மாநில செயற்குழு உறுப்பினா் ஆா்.ஏ.வரதராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினா் பெ.வேடியப்பன், அரூா் சட்டப் தொகுதி மேலிடப் பொறுப்பாளா் முத்துசுவாமி, மாவட்டச் செயலா் சரிதா காளியப்பன், அரூா் நகரத் தலைவா் எஸ்.செந்தில்குமாா், ஒன்றியத் தலைவா்கள் ராஜசேகா், சி.குமாா், செளந்தா், சூா்யமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, விழாவில் பங்கேற்ற பொதுமக்களுக்கு பாஜக சாா்பில், 100-க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.